14 18
இலங்கைசெய்திகள்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் மாயம்

Share

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் மாயம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் அந்த திணைக்களத்தில் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத்துறையில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்களில் 108 வாகனங்கள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

மேலும், பாதுகாப்புத்துறையின் போக்குவரத்து மற்றும் கணக்குப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த 444 வாகனங்களில் 82 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பதிவு செய்யப்படாத வாகனங்களின் மதிப்பு பதினான்கு கோடியே ஒரு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்புத்திணைக்களம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...