12 19
இலங்கைசெய்திகள்

பழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்

Share

பழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்

பழைய வேட்பு மனுவின் பிரகாரமே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் பொதுத் தேர்தலை அடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகின்றது.

முன்னைய வேட்புமனுக்கள் ரத்துச் செய்வது தொடர்பில் நாடாளுமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ இதுவரை எந்தவொாு தௌிவான முடிவும் எடுக்கப்படாத நிலையில், பழைய வேட்பு மனுக்களின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளது.

எனினும் குறித்த வேட்பு மனுவில் உள்ள வேட்பாளரொருவர் மரணித்திருக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக மாத்திரம் வேறு பதிலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...