4 35
இலங்கைசெய்திகள்

மகிந்த மற்றும் ரணிலுக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக வாகனங்கள்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Share

மகிந்த மற்றும் ரணிலுக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக வாகனங்கள்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக வாகனங்களை மீளப்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டின் ஜனாதிபதிகள் உரிமைச் சட்டமானது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்ற சலுகைகளையே வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

2010ஆம் ஆண்டு மே மாதத்தில், அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, அமைச்சரவை அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு மூன்று வாகனங்களையே வைத்திருக்கும் உரிமை உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், திணைக்களத்தின் தகவல்படி, மகிந்த ராஜபக்ச, தாம் பயன்படுத்திய 16 வாகனங்களில் 8 வாகனங்களை ஏற்கனவே திருப்பி அனுப்பியுள்ளார். அதேசமயம் தற்போது விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...