7 27
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை குறித்து பொய்ப்பிக்கப்பட்டுள்ள பிரசாரம்

Share

எரிபொருள் விலை குறித்து பொய்ப்பிக்கப்பட்டுள்ள பிரசாரம்

எரிபொருள் விலைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி செய்து வந்த பிரசாரம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தாம் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தமது சட்டைப்பைக்குள் தரகுப்பணம் செல்வதாக தேசிய மக்கள் சக்தி சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தின் மூலம் இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளன.

தனது சட்டைப் பைக்குள் பணம் கிடைக்கப்பெற்றிருந்தால் அந்தப் பணம் தற்பொழுது துறைசார் அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்கவிற்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், எரிபொருள் விற்பனையின் உண்மை நிலையை வெளிப்படுத்திய அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தேசிய மக்கள் சக்தி, எரிபொருள் விலை குறித்து வெளியிட்டு வந்த தகவல்களின் உண்மை நிலை அம்பலபமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...