2 1 4
இலங்கைசெய்திகள்

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும்! ஜீவன் தொண்டமான்

Share

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும்! ஜீவன் தொண்டமான்

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் இன்று(18.10.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், “ஜனாதிபதியை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேடவேண்டியதில்லை.

நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் நாட்டு மக்கள் பாரிய கஸ்டத்தை எதிர்நோக்க நேரீடும்.

எனவே நாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேல், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணியின் பொகவந்தலாவ அமைப்பாளர் இளையராஜா, நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கலான மாடசாமி சரோஜா பிரபு, மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...