1 29
இலங்கைசெய்திகள்

வருமான வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Share

வருமான வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வரி செலுத்த வருமானம் இல்லை என்றால் வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்த போதிலும், வர்த்தக நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தல் அல்லது வருமான ஆதாரங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் வரி செலுத்தாதவர்களுக்கு இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வரி செலுத்த போதுமான வருமானம் அல்லது இலாபம் இல்லை என்றால், அதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை (30.11.2024) இற்கு முன் நிகழ்நிலை ஊடாக திணைக்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்தநிழலையில், (01.04.2023) முதல் (31.03.2024) வரை அதாவது 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை அனுப்பும் வசதியை உள்நாட்டு இறைவரித் திணைக்கத்தின் இணையதளமான www.ird.gow.lk இல் காட்டப்பட்டுள்ள ஈ-சேவையை அணுகுவதன் மூலம் பெறலாம்.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி செலுத்துவோரை பதிவு செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட TIN இலக்கத்தின் கீழ் 2023/2024 ஆம் ஆண்டிற்கான வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 868,009 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...