11 17
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

Share

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக லெபானனில் மோசமான போர் பதற்ற நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிராந்திய வலயத்தில் குறிப்பிடத்தக்களவு இலங்கையர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதனை கருத்திற் கொண்டு அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக அந்தந்த நாடுகளில் காணப்படும் இலங்கைத் தூதரகங்களின் ஊடாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் அந்தந்த நாடுகளின் இலங்கைத் தூதரகங்கள் அடிக்கடி அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மத்திய கிழக்கில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அதன் அடிப்படையில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் அவசர சந்தர்ப்பங்களில் மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களின் உறவினர்கள், வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 011 – 2338812/ 011 – 7711194 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...