21 7
இலங்கைசெய்திகள்

லெபனானில் இலங்கை படையினர் காயம்: விசாரணைக்கு உறுதியளித்த இஸ்ரேல்

Share

லெபனானில் இலங்கை படையினர் காயம்: விசாரணைக்கு உறுதியளித்த இஸ்ரேல்

லெபனானில் இரண்டு இலங்கை படையினர் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.

டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானில் , ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் பணியாற்றும் இரண்டு இலங்கை அமைதி காக்கும் படையினர், இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்தமை தொடர்பிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் தூதர் ஹகாய் டிகான் இந்த சம்பவத்துக்காக கவலை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கம் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அது கிடைக்கப்பெறும் போது மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் தூதுவர் டிகான் அறிவி;த்துள்ளார்.

Share
தொடர்புடையது
17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...

14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 57 விமான சேவைகள் இன்று ரத்து: தவிக்கும் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து...