5 17
சினிமாசெய்திகள்

3 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

3 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் வெளிவந்த அன்றில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை வெறித்தனமாக நடக்கும்.

ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்த நிலையில், அதன்பின் வெளிவந்த வேட்டையன் வசூலில் ஜெயிலர் படத்தை விட மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த 10ஆம் தேதி வெளியான வேட்டையன் படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்க, லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, பகத் பாசில் என பலரும் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வேட்டையன் படம் பாக்ஸ் ஆபிஸில் மூன்று நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்களில் வேட்டையன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் வேட்டையன் படம் 3 நாட்களில் ரூ. 158 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கின்றனர். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....