8 14
இலங்கைசெய்திகள்

உலகில் 21 வது இடத்தில் இலங்கை – எதற்கு தெரியுமா…!

Share

உலகில் 21 வது இடத்தில் இலங்கை – எதற்கு தெரியுமா…!

இலங்கை (srilanka) தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்களில் பட்டியலில் உலகில் 21 ஆவது இடத்தில் உள்ளதாக இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான சஜீவன அமரசிங்க (sajeewana amarasinghe) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்கள் வீதம் அதிகமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 8 தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

மனச்சோர்வு மற்றும் பல்வேறு மனநிலை காரணமாக குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை தொடர்பான செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் போது உரிய நிறுவனங்கள் உட்பட ஊடகவியலாளர்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்திகளை வெளியிடும் போது அனைத்து தகவல்களையும் உள்ளடங்கியதாக மற்றுமொருவரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் அவற்றை அறிக்கையிடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...