8 14
இலங்கைசெய்திகள்

உலகில் 21 வது இடத்தில் இலங்கை – எதற்கு தெரியுமா…!

Share

உலகில் 21 வது இடத்தில் இலங்கை – எதற்கு தெரியுமா…!

இலங்கை (srilanka) தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்களில் பட்டியலில் உலகில் 21 ஆவது இடத்தில் உள்ளதாக இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான சஜீவன அமரசிங்க (sajeewana amarasinghe) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்கள் வீதம் அதிகமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 8 தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

மனச்சோர்வு மற்றும் பல்வேறு மனநிலை காரணமாக குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை தொடர்பான செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் போது உரிய நிறுவனங்கள் உட்பட ஊடகவியலாளர்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்திகளை வெளியிடும் போது அனைத்து தகவல்களையும் உள்ளடங்கியதாக மற்றுமொருவரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் அவற்றை அறிக்கையிடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...