21 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் கட்சிகள் இலங்கையில் இல்லை! லால்காந்த

Share

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் கட்சிகள் இலங்கையில் இல்லை! லால்காந்த

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எட்டாகப் பிளவுபட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இல்லாமல் போய்விட்டது.

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதி மக்களும் திசைகாட்டி சுற்றித் திரண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாவலப்பிட்டி தொகுதி மகிந்தானந்த அளுத்கமவின் கோட்டையாக மாறியிருந்த நிலையில், அந்த கோட்டையை உடைத்து ஜனாதிபதி தேர்தலில் நாவலப்பிட்டி தொகுதியை வெற்றிபெற நாவலப்பிட்டி பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது ஜனாதிபதி உட்பட இரண்டு அமைச்சர்கள் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பேணுவதற்கு செயற்பட்டு வருவதாகவும், பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்களை அமைச்சுக்களுக்கு நியமித்ததன் பின்னர் தேசிய மக்கள் சக்தி அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் லால்காந்த இதன்போது உறுதியளித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...