16 7
இலங்கைசெய்திகள்

ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Share

ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலியான ஆவணங்கள் மூலம் சேர்பியா செல்ல முற்பட்ட 7 பேரும் அவர்களுக்கு உதவிய ஒருவருமாக மொத்தம் எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 08.20 மணியளவில், இந்தக் குழுவின் முதலாவது பங்களாதேஷ் பிரஜை கட்டாரின் தோஹா நோக்கிப் புறப்படவுள்ள கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-655 இல் ஏறுவதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் செர்பிய விசா இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், பயணியிடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்களுடன் குடிவரவுத் துறையின் எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனையில் செர்பிய விசா மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு இந்த விமானத்திற்கு உதவிய பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய, அவரை கைது செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது மேலும் 06 பங்களாதேஷ் பிரஜைகள் நீர்கொழும்பு விடுதி ஒன்றில் சேர்பியா செல்வதற்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்த பங்களாதேஷ் பிரஜைகள் தங்கியிருந்த நீர்கொழும்பு விடுதியை சுற்றிவளைத்து, குழுவைக் கைது செய்து, குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...