15 5
உலகம்செய்திகள்

வலுக்கும் போர் பதற்றம்: மத்தியகிழக்கிற்கு புடின் திடீர் விஜயம்

Share

வலுக்கும் போர் பதற்றம்: மத்தியகிழக்கிற்கு புடின் திடீர் விஜயம்

மத்தியக்கிழக்கு போர் காரணமாக பதற்றம் மூண்டுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானிய ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ அமைப்பு நாடுகளை எதிர்க்கும் வல்லமையை உக்ரைனுக்கு எதிரான போரின் மூலம் சர்வதேசத்துக்கு எடுத்துரைத்துள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில் மத்தியகிழக்கில் அமெரிக்க ஆதரவு நாடான இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பாரிய தாக்குதலை தொடுத்துள்ள நிலையில் புடினின் இந்த விஜயம் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பில் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிப்பார் என்று ரஷ்ய அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

துர்க்மெனிஸ்தானில் இந்த சந்திப்பானது இடம்பெறும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நகர்வு இருதரப்பு விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதற்கும், நிச்சயமாக, மத்திய கிழக்கில் கடுமையாக மோசமடைந்துள்ள சூழ்நிலையைப் பற்றி விவாதிப்பதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகிறது.

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் கடந்த வார தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லா கொல்லப்பட்டிருந்தார்.

இதற்கு எதிராக ஈரான் பாரிய பதிலடியை இஸ்ரேலை நோக்கி நகர்த்தியிருந்தது.

இன்றுவரை ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வித நகர்வையும் முன்னெடுக்காத நிலையில் புடின் ஈரான் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை பெரும் எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...