24 6701145f6c04e
இலங்கைசெய்திகள்

பியூமி ஹன்சமாலியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணை

Share

பியூமி ஹன்சமாலியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணை

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணைகளை நடத்தியுள்ளது.

இதன்படி நேற்று (04) சுமார் 9 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையானது இவருக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் BMW ரக கார் நடிகை பியூமி ஹன்சமாலியிடம் இருந்து வாங்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி, BMW கார் வாங்குவதற்கு பியூமி ஹன்சமாலி எப்படி பணம் சம்பாதித்தார் மற்றும் அவர் விற்பனை செய்யும் அழகுசாதன பொருட்கள் ஊடாக அதிக அளவு பணம் பெற்றது குறித்தும் சட்டவிரோத சொத்துகள் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.

அந்த விசாரணை தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக பியூமி ஹன்சமாலி நேற்று காலை 9 மணியளவில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 15
செய்திகள்இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை! சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்...

MediaFile 1 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வென்னப்புவையில் அதிரடி: 800 கிலோவிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான சுறா மீன்களுடன் 7 சந்தேகநபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள...

im 83941943
செய்திகள்உலகம்

சீன இராணுவத்தில் அதிரடி சுத்திகரிப்பு: மிகச்சக்திவாய்ந்த ஜெனரல் ஜாங் யௌஷியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்!

ஒழுக்கக் குறைபாடு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பாக, சீன இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள...

Untitled 113 2
இலங்கைசெய்திகள்

தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்: EPF நிதியில் மாற்றமில்லை என அரசாங்கம் உறுதி!

தனியார் மற்றும் அரை அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கெனப்...