24 67009657c22f4
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

Share

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் அவகாசம் செல்லும், என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தொடர்புடைய அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் மேற்படி தாமதங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதன்படி தேசிய தணிக்கை அலுவலகம் கடந்த வாரம் விசாரணையை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், விசாரணை நடத்தும் தணிக்கை அதிகாரிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமில்லாத வாகனங்களை முறையான நடைமுறையின்றி பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐந்து தணிக்கை அதிகாரிகள் இருக்க வேண்டிய சில அரச நிறுவனங்களில் இரண்டு அதிகாரிகள் மட்டுமே இருப்பதாகவும் மேற்கண்ட வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது..

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...