24 67009657c22f4
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

Share

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் அவகாசம் செல்லும், என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தொடர்புடைய அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் மேற்படி தாமதங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதன்படி தேசிய தணிக்கை அலுவலகம் கடந்த வாரம் விசாரணையை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், விசாரணை நடத்தும் தணிக்கை அதிகாரிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமில்லாத வாகனங்களை முறையான நடைமுறையின்றி பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐந்து தணிக்கை அதிகாரிகள் இருக்க வேண்டிய சில அரச நிறுவனங்களில் இரண்டு அதிகாரிகள் மட்டுமே இருப்பதாகவும் மேற்கண்ட வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது..

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...