24 67007b99bff80
இலங்கைசெய்திகள்

முன்னாள் அரசியல் தலைமைகளின் சுகபோக வாழ்க்கையை அம்பலப்படுத்த தயாராகும் அநுர தரப்பு

Share

முன்னாள் அரசியல் தலைமைகளின் சுகபோக வாழ்க்கையை அம்பலப்படுத்த தயாராகும் அநுர தரப்பு

கடந்த காலங்களில் பொருளாதார பாதிப்பினை நாட்டு மக்கள் எதிர்கொண்டபோது முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்க்கையை வாழ்ந்த விதத்தை மக்களுக்கு வெளிப்படுத்த போவதாக தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி யட்டிநுவரயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மக்கள் அவதியுறும் வேளையில் இந்நாட்டு தலைவர்கள் எவ்வாறான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் முன்னாள் அரசியல்வாதிகளின் குடியிருப்புகள் மக்களின் பார்வைக்கு விடப்படவுள்ளதான செய்தியை அறிந்து சிலர் அச்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆடம்பரமான உடமைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மக்களின் வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியாதவர்கள் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் பணம், எவ்வாறு வீணடிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.” எனவும் லால்காந்த கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...