25 1
இலங்கைசெய்திகள்

ரணில் மற்றும் சஜித் பிரேமதாச இணைவதினை குழப்பும் முக்கிய தலைவர்

Share

ரணில் மற்றும் சஜித் பிரேமதாச இணைவதினை குழப்பும் முக்கிய தலைவர்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும், சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதினை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் குழப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பிற்கும் இடையில் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்டதன் பின்னர் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இரு கட்சிகளும் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட முடியும் என தாம் கருதியதாக தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்டதன் பின்னர் முரண்பாட்டு நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமைப் பொறுப்பினை ருவான் விஜேவர்தனவிற்கும் சிரேஸ்ட தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கும் தமது தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த யோசனைக்கு கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க இணங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...

Bangladesh Politics 1 1760710849824 1760710864579
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கத்தின் புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் நேற்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு...

Anura Kumara Dissanayake
செய்திகள்இலங்கை

மக்களின் விருப்பத்திற்கு மாறான சட்டம் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி அனுரகுமார உறுதி

சாதாரண குடிமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஜனாதிபதி அனுரகுமார...

1760770586 we
செய்திகள்இலங்கை

தீபாவளிப் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து பல பகுதிகளுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களுக்குப் பயணிகளின் வசதிக்காக விசேட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின்...