17
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு

Share

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, இன்று (01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath), கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் புதிய பொருளாதாரக் குழு ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பதற்காக குறித்த குழு ஒக்டோபர் இரண்டாம் திகதி முதல் நான்காம் திகதி வரை கொழும்புக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.

இந்தநிலையில், இந்த சந்திப்பின் போது, நாட்டின் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்கள் மாத்திரமே இடம்பெறும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அததோடு, கட்டமைப்பு தொடர்பான மேலதிக கலந்துரையாடல் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் இடம்பெறும் எனவும் அவர் நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, சர்வதேச நாணய பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...