24 66f8ce3f915ac 6
இலங்கைசெய்திகள்

இலவச விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்: அரசு வழங்கிய பதில்

Share

இலவச விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்: அரசு வழங்கிய பதில்

இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த பிரச்சினைக்கு அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் (Vijitha Herath) பதிலளித்துள்ளார்.

தற்பொழுது நாடாளுமன்ற கலைக்கப்பட்டுள்ள நிலையில், இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுவதாகவும் இதனால் இவ்வாறு தாமதம் நீடிப்பதாகவும் அவர் அதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் படி, நாடாளுமன்றம் இயங்காமல் செயற்படுவதற்கான தெரிவுகள் குறித்து ஆராய சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தீர்வு காணப்படும் வரை அல்லது புதிய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் வரை தாமதம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை தற்போது தனது கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்க்க முடியாமல் திணறி வருவதாகவும், நீதிமன்ற உத்தரவு காரணமாக புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அமைச்சர் விஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹேரத், உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க புதிய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளினால் இலங்கை தற்போது பழைய முறைமையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...