6 36
இலங்கைசெய்திகள்

இராணுவ – புலனாய்வு கட்டமைப்பில் மாற்றத்தை தாமதப்படுத்தும் அநுர

Share

இராணுவ – புலனாய்வு கட்டமைப்பில் மாற்றத்தை தாமதப்படுத்தும் அநுர

இராணுவ – புலனாய்வு கட்டமைப்பில் மாற்றத்தை தாமதப்படுத்தும் நடவடிக்கையில் புதிய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வல்லரசு நாடுகளை பொறுத்தமட்டில் அநுரவின் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முயற்சித்து வருகின்றன. இருப்பினும் சீனாவினை புறம்தள்ளி இந்தியாவுடன் பயணிப்பதென்பது நடக்காத காரியமாகும்.

சீனாவினை முதலில் நம்பி இந்த அரசாங்கம் பயணிக்குமானால் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே வெளிநாடுகளின் புலனாய்வு கட்டமைப்புக்களை முதலில் கண்காணிப்பதன் மூலம் சிறந்த மாற்றத்திற்கான அரசாங்கமாக செயற்பட முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் உலக நாடுகளுக்கு மாற்று கருத்துக்களை வெளியிட்ட தமிழ் சமூகம் 2009 பின்னர் தென்னிலங்கை அரசியலோடு இணைந்து செயற்படுவதாக தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு,கிழக்கில் கோட்டாபய ராஜபக்சவிற்கு அளித்த வாக்குகளை விட அநுர குமாரவிற்கு செலுத்தப்பட்ட வாக்குகள் குறைவாகவே உள்ளது.

தமிழ் மக்கள் கடந்த காலத்தில் வெளியிட்ட மாற்றுக்கருத்துக்களை பின்பற்றி தற்போது புதிய அரசாங்கம் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...