2 39
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலில் சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம்! முன்னாள் எம்.பி. மனோ சூளுரை

Share

பொதுத் தேர்தலில் சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம்! முன்னாள் எம்.பி. மனோ சூளுரை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம் எனவும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாட்சியை நிறுவியே தீருவோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்களைச் செய்துகொண்டதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டணியாகக் கலந்துரையாடுவோம்.

நாங்கள் தனிக் கட்சி. தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற அடிப்படையில் இம்முறை மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் எங்களின் ஆதரவாளர்கள் வாக்குகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.

எங்கள் மக்கள் எங்களின் நிலைப்பாட்டை ஏற்று நடந்திருக்கின்றார்கள். அது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தெரியும்.எங்கிருந்தாலும் நாங்கள் நிலைத்திருப்போம்.

இன்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் விருப்பத்துடனேயே இருக்கின்றோம். அதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...