8 38
இலங்கைசெய்திகள்

அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

Share

அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

இலங்கையின் (Sri Lanka) ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake) அமெரிக்க (America) ஜனாதிபதி ஜோ பைடன் ( Joe Biden) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தனது வாழ்த்து செய்தியினை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், அநுரவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்த அநுரவுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பைடனிற்கு நன்றி தெரிவித்து அநுர வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் அன்பான நல்வாழ்த்துக்களை நான் பாராட்டுகிறேன்.

எனது தலைமையிலான இலங்கையானது எமது நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படும்.

அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான எனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...