13 25
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி

Share

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி

இலங்கையின்(sri lanka) பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் உலக வங்கி (world bank)தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமாரவுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர்(Martin Raiser) மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டி(Riccardo Puliti) ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்கு அரசின் தொடர் கவனம் தேவை என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், ‘வளர்ச்சி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை’ என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகத்தின் தலைமையின் கீழ் உள்ளடங்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் உலக வங்கியின் உறுதிப்பாட்டை இந்தக் கடிதம் உறுதிப்படுத்துகிறது.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

bts pictures 0ynzwrpbewd63qlf
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...