2 37
இலங்கை

நாடாளுமன்ற தேர்தல் : வியூகம் வகுக்கும் தமிழ் தேசிய பொது கட்டமைப்பு

Share

நாடாளுமன்ற தேர்தல் : வியூகம் வகுக்கும் தமிழ் தேசிய பொது கட்டமைப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ் தேசிய பொது கட்டமைப்பினர் இன்று(26) யாழ்ப்பாணத்தில்(jaffna) கலந்துரையாடியுள்ளனர்.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகள் நேற்று (25) கலந்துரையாடிய நிலையில் இன்று இரண்டாவது கட்டமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின், பொதுச் செயலாளர் கோவிந்தன் கருணாகரம், ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி, அரியநேத்திரன், அரசியர் ஆய்வாளர்களான ம.நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 19
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதீத உயர்வு: அவுன்ஸ் ஒன்று 4,700 டொலர்களைக் கடந்தது!

ஈரானுடனான மோதல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

Untitled 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் கௌரவம் காக்கப்பட வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்!

இலங்கையின் மூத்த குடிமக்கள் அனைவரும் தங்களது உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்துடன்...

Untitled 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கள்ளச்சாராயச் சுற்றிவளைப்பு: 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவித் தாக்குதலில் காயம்!

நுவரெலியா மாவட்டம், கோட்மலை வேடமுல்ல ரம்பொடை பகுதியில் உள்ள வனக் காப்பகத்திற்குள் இயங்கி வந்த கள்ளச்சாராய...