22 15
இலங்கைசெய்திகள்

அநுரவின் பதவி வெற்றிடம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

Share

அநுரவின் பதவி வெற்றிடம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

அநுர குமார திஸாநாயக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் செய்ததன் காரணமாக ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்றுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்றம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

கொழும்பு தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அப்பதவியை இன்று (23) முதல் ஏற்றுக் கொண்டதன் காரணமாக, அத்திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற ஆசனத்தை இராஜினாமாச் செய்திருப்பதாக அவர் தனக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் அறிவித்து்ள்ளார்.

இந்நிலையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின், 66(இ) உறுப்புரையின் பிரகாரமும், 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் கீழ் இதனைத் தெரிவிப்பதாக செயலாளர் நாயகம் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...