10 23
இலங்கை

திருகோணமலையில் 106 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய குடிமகன்

Share

திருகோணமலையில் 106 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய குடிமகன்

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் 106 வயதில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது நாடளாவிய ரீதியில் இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் அனைத்து பிரஜைகளும் தமது வாக்களிக்கும் நடவடிக்கைகளை காலை ஏழு மணியிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.

இதனடிப்படையில், திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ், நாட்டில் இதுவரை காலமும் குறிப்பாக ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அத்துடன் இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...

world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு கால விசேட பேருந்து சேவை: கொழும்பிலிருந்து 1,500 பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, இலங்கை போக்குவரத்துச்...