28 11
உலகம்செய்திகள்

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

Share

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்யாவின் (Russia) – ட்வெர் பகுதியில் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை சேமித்து வைத்திருந்த ஆயுத கிடங்கை உக்ரைன் ஆளில்லா விமான (drone) தாக்குதல் மூலம் அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ட்வெர் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள நிகோபோல் நகரின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 03பேர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் உக்ரேனியப் படைகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை மீட்பதற்கான ரஷ்யாவின் எதிர்த்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என அப்பகுதியில் அமைக்கப்பட்ட உக்ரைனின் இராணுவ நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குர்ஸ்க், பிரையன்ஸ்க், ஸ்மோலென்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பகுதிகளில் உக்ரைன் எல்லை மற்றும் அண்டை நாடான ஓரியோல் பகுதியில் 27 உக்ரேனியஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...