2 28
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான விபரங்கள்!

Share

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான விபரங்கள்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை(21.09.2024) நடைபெறவுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதியான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு வாக்காளர் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது எவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கியுள்ளார்.

அதன்படி, “அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுடன் அடையாள அட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

மக்கள் பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் ஆகியவற்றை நீங்கள் எடுத்துச் செல்லலாம். கிராம அதிகாரி மூலம் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையும் வாக்களிக்க செல்லுபடியாகும்.”என கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...