2 28
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான விபரங்கள்!

Share

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான விபரங்கள்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை(21.09.2024) நடைபெறவுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதியான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு வாக்காளர் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது எவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கியுள்ளார்.

அதன்படி, “அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுடன் அடையாள அட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

மக்கள் பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் ஆகியவற்றை நீங்கள் எடுத்துச் செல்லலாம். கிராம அதிகாரி மூலம் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையும் வாக்களிக்க செல்லுபடியாகும்.”என கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...