23 13
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தள்ளுபடி

Share

தேசபந்து தென்னகோன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தள்ளுபடி

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) பொலிஸ் மா அதிபராக, செயற்படுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) தள்ளுபடி செய்துள்ளது.

பெல்லன்வில தம்மரதன தேரர், வண.பேராசிரியர் அகலகட சிரிசுமண தேரர் மற்றும் பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல ஆகியோர் இந்த இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த தலையீட்டு மனு, நீதியரசர்களான யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இடையீட்டு மனுவில் உள்ள உள்ளடக்கம் வழக்கை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...