22 11
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் தேர்தலுக்காக 1000இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்

Share

முல்லைத்தீவில் தேர்தலுக்காக 1000இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்

முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (17.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்திருக்கின்றது.

குறிப்பாக எங்களுடைய மாவட்டத்திலே 86,889 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். 137 வாக்களிப்பு நிலையங்களிலே வாக்களிக்கின்ற பணி இடம்பெற இருக்கின்றது.

தேர்தல் பணிகளுக்காக சுமார் 1506 அரச அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 500 பொலிஸார் ஈடுபட இருக்கிறார்கள்.

137 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்களிக்கும் பெட்டிகள் 21 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற 8 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு கணக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது.

தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றவர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டைகளை கொண்டுவருதல் வேண்டும். இருப்பினும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிப்பு நிலையங்களில் தங்களுடைய வாக்குகளை அளிக்க முடியும் என்றும் குறி்ப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...