22 11
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் தேர்தலுக்காக 1000இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்

Share

முல்லைத்தீவில் தேர்தலுக்காக 1000இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்

முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (17.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்திருக்கின்றது.

குறிப்பாக எங்களுடைய மாவட்டத்திலே 86,889 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். 137 வாக்களிப்பு நிலையங்களிலே வாக்களிக்கின்ற பணி இடம்பெற இருக்கின்றது.

தேர்தல் பணிகளுக்காக சுமார் 1506 அரச அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 500 பொலிஸார் ஈடுபட இருக்கிறார்கள்.

137 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்களிக்கும் பெட்டிகள் 21 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற 8 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு கணக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது.

தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றவர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டைகளை கொண்டுவருதல் வேண்டும். இருப்பினும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிப்பு நிலையங்களில் தங்களுடைய வாக்குகளை அளிக்க முடியும் என்றும் குறி்ப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....