21 11
இலங்கைசெய்திகள்

சஜித்தின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்: எஸ்.பி.திஸாநாயக்க விசனம்

Share

சஜித்தின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்: எஸ்.பி.திஸாநாயக்க விசனம்

வடக்கில் மாகாண சபை முறைமை அமைவதை ரணசிங்க பிரேமதாச கடுமையாக எதிர்த்திருந்த நிலையில், தற்போது வடக்கு கட்சிகள் அவரது மகன் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏமாற்றததையே சம்பாரிக்க போகின்றனர் என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

22ஆம் திகதி ஒருவேளை சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு வாக்களிக்குத் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்களுக்கு வாக்குறுதியளித்த விடயங்களுக்கு மேலதிகமாக உதவி தொகைகளை பெற்றுத்தருவதாக சஜித் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக அவர், பதவியேற்றால், இந்த தொகையை எங்கிருந்து திரட்டப்போகின்றார்.

சஜித்தின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்: எஸ்.பி.திஸாநாயக்க விசனம் | Disappointment Awaits People Under Sajith Rule

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மிகப்பெரும் விருப்பமாக இருந்தது.

அதற்காகவே அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. ஆனால் தோட்ட முதலாளிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் இந்த தோட்டத்தில் வீடு ஒன்றை கட்டினாரா? இந்த நாட்டின் நிலை என்ன தெரியுமா, எரிவாயு இல்லை, எரிபொருள் இல்லை, பால் இல்லை, இவற்றைக் கொண்டு வர பணம் இல்லை, மக்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்.

ரணில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைவரையும் நேசிக்கும் நபர். எனவே அவர் மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...