19 14
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி…! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Share

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி…! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு, மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தலில் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு புள்ளடியை இடமுடியும். அதேவேளை விருப்பு வாக்குகளையும் வழங்குவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தாம் விரும்பும் வேட்பாளருக்கு முதலாவது இலக்கத்தையும் விருப்பம் ஏற்படுமாயின் ஏனைய இரண்டாம், மூன்றாம் வேட்பாளர்களுக்கு உரிய இலக்கங்களை பதிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

புள்ளிடியோடு இலக்கங்களை பதிவு செய்தால் உரிய வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1982ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காலமும் நடைபெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் விருப்பு வாக்குகளை எண்ணத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது.

இரண்டாவது வாக்குகளில் எண்ணுவதற்கான தேவைகள் ஏற்படுமாயின் அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...