24 66e51c184b392
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்சவுக்கு தொடரும் கொலை அச்சுறுத்தல்

Share

2009இல் யுத்தத்தை வெற்றிகொண்டதன் காரணமாக , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொலை அச்சுறுத்தல் இன்னமும் இருப்பதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரப் பேரணி ஒன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குட்டியாராச்சி, இறுதி போரை இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவருக்கான அச்சுறுத்தல் முற்றாக முடிவடையவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் ராஜபக்சவின் பாதுகாப்பை திரும்பப் பெறுவது அல்லது தேர்தலுக்குப் பின்னர் அவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள், அவரை படுகொலை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் என்று குட்டியாராச்சி எச்சரித்துள்ளார்.

2022 அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது பிரதமர் அலுவலகம் மீதான தாக்குதலின் போது ராஜபக்சவைக் கொல்லும் திட்டம் இருந்ததாகக் கூறிய அவர், திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே, ராஜபக்ச உயிர் தப்பியதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...