7 20
இலங்கைசெய்திகள்

மூன்று நாட்களாகியும் ரணிலின் கேள்விக்கு பதில் வழங்காத அநுர

Share

மூன்று நாட்களாகியும் ரணிலின் கேள்விக்கு பதில் வழங்காத அநுர

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்ற தனது கேள்விக்கு மூன்று நாட்களாகியும் அநுர பதிலளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று (13.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானால் டொலர் ஒன்றின் பெறுமதி 500 ரூபாவை தொடும். கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இருந்த பொருளாதார நிலைமையை விட மோசமான நிலை உருவாகும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சிரத்தையுடன் மீள கட்டியமைக்கப்பட்டது. அதனை மீண்டும் நிலைகுலைய அனுமதிக்க முடியாது.

அவர் திருடன் இவர் திருடன் என்று கூறாமல் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் விவாதிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...