17 11
இலங்கைசெய்திகள்

வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 ஆவணங்கள்

Share

வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 ஆவணங்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்பது வகையான ஆவணங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வு அடையாள அட்டை, பிரதேச செயலகத்தினால் வெளியிடப்படும் வயோதிபர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வெளியிடப்படும் மதகுருமாறுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதி செய்யும் கடிதம், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் தற்காலிக அடையாள அட்டை மற்றும் விசேட தேவை உடையவர்களுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அடையாள அட்டைகள் எதுவும் இன்றி வாக்குச்சாவடிக்குச் செல்லும் வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் தெளிவற்ற அடையாள அட்டைகள், அமைச்சரவை திணைக்கள மற்றும் அரசாங்க நிறுவனங்களினால் வெளியிடப்படும் சேவை அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் செய்து வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற எந்த ஒரு ஆவணமும் வாக்குச்சாவடியில் ஏற்றுக் கொள்ளப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...