7 19
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களுக்குப் பயந்த ரணில்: எழுந்துள்ள விமர்சனம்

Share

ராஜபக்சக்களுக்குப் பயந்த ரணில்: எழுந்துள்ள விமர்சனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சக்களுக்குப் பயந்து தன்னுடைய காலத்தைச் செலவழித்தவர் என அகில இலங்கை மகா சபை கட்சியின் தலைவர் காசிலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வெய் ஓப் மீடியா கற்கை நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது எனத் தெளிவாகத்தான் இருந்தோம். ரணில் பல வாக்குறுதிகளை எங்களுக்குக் கொடுத்திருந்தார். முதலில் அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர் நீங்கள் கூறுங்கள் எல்லாவற்றையும் செய்கின்றேன் என்றார்.

அப்போது, மாகாண சபைக்குக் கீழ் இருந்த பல பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலைகளாகவும், வைத்தியசாலைகளையும் தேசிய வைத்தியசாலைகளாகவும் மாற்றியுள்ளனர்.

இதனை உடனடியாக மாகாணத்தின் கீழ் மாற்ற வேண்டும். இதற்குச் சட்டம் இயற்ற வேண்டியதில்லை. இதற்கு ஒரு உத்தரவாதம் வழங்கினால் சரி என்றோம்.

மேலும், கச்சேரிகளை ஒரு அமைச்சரவை தீர்மானம் எடுத்து மாற்ற முடியும் என்றோம். அதற்கும் உடன்படுவதாக அவர் தெரிவித்தார். நாங்கள் விசேட அதிகாரத்தைக் கொண்டு இவற்றையெல்லாம் உருவாக்க முடியும் என்றோம்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...