7 19
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களுக்குப் பயந்த ரணில்: எழுந்துள்ள விமர்சனம்

Share

ராஜபக்சக்களுக்குப் பயந்த ரணில்: எழுந்துள்ள விமர்சனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சக்களுக்குப் பயந்து தன்னுடைய காலத்தைச் செலவழித்தவர் என அகில இலங்கை மகா சபை கட்சியின் தலைவர் காசிலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வெய் ஓப் மீடியா கற்கை நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது எனத் தெளிவாகத்தான் இருந்தோம். ரணில் பல வாக்குறுதிகளை எங்களுக்குக் கொடுத்திருந்தார். முதலில் அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர் நீங்கள் கூறுங்கள் எல்லாவற்றையும் செய்கின்றேன் என்றார்.

அப்போது, மாகாண சபைக்குக் கீழ் இருந்த பல பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலைகளாகவும், வைத்தியசாலைகளையும் தேசிய வைத்தியசாலைகளாகவும் மாற்றியுள்ளனர்.

இதனை உடனடியாக மாகாணத்தின் கீழ் மாற்ற வேண்டும். இதற்குச் சட்டம் இயற்ற வேண்டியதில்லை. இதற்கு ஒரு உத்தரவாதம் வழங்கினால் சரி என்றோம்.

மேலும், கச்சேரிகளை ஒரு அமைச்சரவை தீர்மானம் எடுத்து மாற்ற முடியும் என்றோம். அதற்கும் உடன்படுவதாக அவர் தெரிவித்தார். நாங்கள் விசேட அதிகாரத்தைக் கொண்டு இவற்றையெல்லாம் உருவாக்க முடியும் என்றோம்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...