10 15
இலங்கைசெய்திகள்

இனம், மதம் குறித்து கவனம் செலுத்தவில்லை : கிழக்கில் ரணில் கருத்து

Share

இனம், மதம் குறித்து கவனம் செலுத்தவில்லை : கிழக்கில் ரணில் கருத்து

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தாகவும், மதம் அல்லது இனம் குறித்து கவனம் செலுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமது நோக்கம் வர்த்தகம் மற்றும் விவசாயத்தில் கவனம் செலுத்துவதுடன், அந்தத் துறைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே தவிர, மதம் அல்லது இனம் அல்ல என்று சாய்ந்தமருது மற்றும் கொக்காவிலில் நடைபெற்ற பேரணியில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை உறுதி செய்வதன் மூலம் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்க முடிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி காலத்தில் கிழக்கின் இந்தப் பகுதிகளுக்குச் சென்றமை நினைவிருக்கிறது.

இந்தநிலையில், அன்றைய நாட்களுடன் ஒப்பிடும் போது இந்த பிரதேசம் தற்போது மிகவும் அபிவிருத்தியடைந்துள்ளது.

எனினும் கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்யப் போவதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...