19 10
இலங்கைசெய்திகள்

முஸ்லிம்கள் மத்தியில் பிரசாரத்தில் ஈடுபடாத பொது வேட்பாளர்: வெளியான காரணம்

Share

முஸ்லிம்கள் மத்தியில் பிரசாரத்தில் ஈடுபடாத பொது வேட்பாளர்: வெளியான காரணம்

முஸ்லிம் தலைவர்கள் பலர் வடக்கு – கிழக்கு இணைப்பை ஏற்க மறுப்பதாலேயே கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளரை பிரசாரம் செய்ய நான் கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாதாந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் மலையக மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.

தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் எமது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க முன்வர வேண்டும். அவர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதை நாம் மன மகிழ்வுடன் வரவேற்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி பரிணமித்திருக்கின்றது. உலக அரங்குகளில் எமது குரல் ஓங்கி ஒலிக்க நாம் ஒரு பலமான மக்கள் கூட்டம் என்ற உண்மையை நிலைநிறுத்துவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...