8 18
உலகம்செய்திகள்

பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள்

Share

பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள்

குடியுரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கான விசா வழங்கி, தங்களுடன் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை முக்கியமான 5 நாடுகள் வழங்குகின்றன.

அந்த வகையில், அவுஸ்திரேலியா (Ausralia), கனடா (Canada), நியூசிலாந்து (New Zealand), பிரித்தானியா (United Kingdom) மற்றும் ஜேர்மனி (Germany) ஆகிய நாடுகளே பெற்றோருக்கான விசா வழங்குகின்றன.

அவுஸ்திரேலியா பெற்றோருக்கான இரண்டு வகை விசாக்களை வழங்குகிறது.

Contributory Parent Visa: இது விலை உயர்ந்ததாக இருக்கும், ஆனால் செயல்படுத்தும் நேரம் குறைவாக இருக்கும்.

Non-Contributory Parent Visa: இது சற்று குறைந்த செலவில் இருக்கும், ஆனால் செயல்படுத்தும் நேரம் நீண்டதாக இருக்கும்.

கனடா “Parent and Grandparent Super Visa” எனும் விசாவை வழங்குகிறது.

இது பெற்றோர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கனடாவில் தங்க அனுமதி அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு முறை 2 ½ ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக தங்க முடியும்.

நியூசிலாந்தில் “Parent Resident Visa” வழங்கப்படுகிறது.

இதில், குடியுரிமை பெற்றவர் அல்லது நிரந்தர குடியுரிமையாளர் தங்கள் பெற்றோரை கொண்டு வர அனுமதி பெறுவர். பிள்ளையின் நிதி நிலைமையின் அடிப்படையில் பெற்றோர் விசா வழங்கப்படும்.

பிரித்தானியாவில், “Parent of a British Child Visa” அல்லது “Elderly Dependent Visa” வழங்கப்படுகிறது.

இதில் பெற்றோர் அல்லது பெரியவராக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் குழந்தைகளின் அருகில் இருப்பதற்கான விசாவை பெற முடியும்.

ஜேர்மனியில் “Family Reunification Visa” மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியும்.

இந்த விசா பெறுவதற்கு குழந்தைகள் ஜேர்மனியில் வசித்து பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த விசாக்கள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் சேர்ந்து வாழ உதவுகின்றன, மேலும் குடும்ப உறவை மேம்படுத்துகின்றன.

Share
தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...