12 8
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் – வெற்றி பெறப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார்

Share

தென்னிலங்கையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் – வெற்றி பெறப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

வழமையாக ஜனாதிபதி தேர்தலில் பிரதான இரண்டு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டித்தன்மை காணப்படும்.

எனினும் இம்முறை மும்முனை மோதலாக அது மாறியுள்ளது. ரணில், சஜித், அநுர என்ற மூன்று தரப்பினருக்கும் இடையில் கடும் போட்டி நிலை காணப்படுகிறது.

நாமல் ராஜபக்ச தேர்தல் களத்தில் இருந்தாலும், பரீட்சார்த்த போட்டியாக அவர் இதனை கருதுகின்றார். இதில் வெற்றி பெற முடியாது என்பது அவருக்கும் தெரிந்திருந்தாலும் ஒத்திகை போட்டியாக இது மாறியுள்ளது.

இம்முறை ஜனாதிபதி முடிவுகள் விருப்பு வாக்கின் அடிப்படையில் கூட தீர்மானிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதற்கு தயார் நிலையில் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறான நிலையில் பிரதான மூன்று வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். இதன் பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

கடந்த வாரம் முதல் மாற்றம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக பிரச்சாரம் செய்து வரும் ஜனாதிபதி வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். எனினும் அவருக்கான ஆதரவு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

எனினும் சிறுபான்மை இனமாக முஸ்லிம் சமூகத்திடம் அவருக்கான ஆதரவு வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அதேவேளை, கடந்த வாரம் வரையில் இரண்டாம் நிலையில் காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருவதுடன் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைக்குமானால் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

 

மறுபுறத்தில் மீட்டெடுத்த பொருளாதாரத்தை தொடர்ந்தும் வலுப்படுத்த ஆணையை கேட்டு வரும் ஜனாதிபதி வேட்பாளர் பாரிய பின்னடைவை கண்டிருந்தார்.

 

எனினும் அண்மைய பெறுபேறுகளுக்கு அமைய அவரின் செல்வாக்கும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

 

அடுத்து வரும் சில தினங்களால் தென்னிலங்கையில் அரசியல் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில்  பலம்பொருத்திய மேற்குலக நாடுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவ்வாறான மாற்றம் ஒன்று ஏற்படுமாயின் அது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளருக்கு பாரிய எழுச்சியை ஏற்படுத்தி, வெற்றிக்கான பாதைக்கு இட்டுச் செல்லும்.

 

ஆனாலும் பொருளாதார மீட்பரின் நெருங்கிய சகாக்கள் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

 

கடந்த காலங்களில் பல்வேறு மோசடிகள், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை மக்கள் முற்றாக புறக்கணிக்க  ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக அவரின் வெற்றி நிச்சயமற்றதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...