26 7
இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில்! தலதா அத்துகோரள

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில்! தலதா அத்துகோரள

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

தமக்கு பல்வேறு வழிகளில் அநீதிகள் இழைக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் தங்களது கருத்துக்களுக்கு எந்த வகையிலும் செவிமடுப்பதில்லை . இதனால் தாம் கடும் அதிருப்தியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பெண் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள தயார் என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும், நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...