7 16
அரசியல்இலங்கைசெய்திகள்

அநுர பதிலளிக்கும் வரை பேரணிகளில் கேள்வி எழுப்புவேன் : ரணில் தெரிவிப்பு

Share

அநுர பதிலளிக்கும் வரை பேரணிகளில் கேள்வி எழுப்புவேன் : ரணில் தெரிவிப்பு

அநுரகுமார திசாநாயக்க பதிலளிக்கும் வரை, அனைத்து பேரணிகளிலும் அவரிடம் கேள்வி எழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“வடக்கில் உள்ள மக்களை அச்சுறுத்தியதற்காக மன்னிப்பு கேட்பீர்களா என்று நான் அநுரவிடம் கேள்வி எழுப்பினேன். யாழ்ப்பாணத்தில் நான் கூறிய எனது இந்தக் கருத்துக்கு அவர் பதிலளித்ததாகக் கேள்விப்பட்டேன்” என்று வெலிமடையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுமதி செயலாக்க வலயங்களை அமைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்று சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அநுரவின் விஞ்ஞாபனம் இலங்கை ஏற்கனவே செய்துள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரத்து செய்யும் என்று கூறுகிறது.

இந்தநிலையில், தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்ய முடியும்? இந்தக் கேள்விக்கு அநுர பதிலளிக்க வேண்டும். அவர் எனக்குப் பதிலளிக்கும் வரை இந்தக் கேள்விகளை அனைத்து பேரணிகளிலும் எழுப்புவேன் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...