3 17
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார்! மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள காரணம்

Share

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார்! மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள காரணம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவாரென மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘இதுவரை பிரதான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டனர். ஆனால் இம்முறை மூவர் போட்டிக்களத்தில் உள்ளனர்.

எதிர்க்கட்சி தரப்பில் இருக்கும் இருவரின் வாக்குகள் இரண்டாக பிரியும் நிலைமை உள்ளது . அது ரணிலுக்கு சாதகமாக அமையும் என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு, அரசியல்வாதிகள் உட்பட பலர் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தபால் மூல வாக்குகளில் அனுகூலம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...