14 7
இலங்கைசெய்திகள்

ரணிலின் பிரசார நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க மறுக்கும் ஐ.தே.க

Share

ரணிலின் பிரசார நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க மறுக்கும் ஐ.தே.க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் ஜனாதிபதிக்கு எதிரான போக்கில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் குழுவினால் மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது எனத் தெரிவித்த அவர், அதற்குத் தேவையான ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...