27 5
இலங்கைசெய்திகள்

நுவரெலியாவில் ஜனாதிபதி 85 வீத வாக்குகளை பெறுவார்! எஸ்.பி.திசாநாயக்க

Share

நுவரெலியாவில் ஜனாதிபதி 85 வீத வாக்குகளை பெறுவார்! எஸ்.பி.திசாநாயக்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா மாவட்டத்தில் 85 வீத வாக்குகளை பெற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று ரீதியான வெற்றியை பதிவு செய்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பாரியளவு வாக்குகளை அவர் பெற்றுக்கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 11 பேர் தவிர்ந்த ஏனைய அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியனவும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பழனி திகாம்பரத்தின் கட்சி இரண்டாக பிளவடைந்து உள்ளதாகவும் அவரது செயற்பாடுகளை பிடிக்காதவர்கள் தம்முடன் பேசி வருவதாகவும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...