1 6
அரசியல்இலங்கைசெய்திகள்

அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக மாறுவார் : ரணிலின் நம்பிக்கை

Share

அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக மாறுவார் : ரணிலின் நம்பிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விஞ்சி அதிக வாக்குகளை பெறுவார்.

இதன் மூலம் இந்த வருட இறுதியில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மகியங்கனையில் நடைபெற்ற பேரணியொன்றில் உரையாற்றிய விக்ரமசிங்க, தனது முன்னாள் அரசியல் நண்பர், எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் தனது கடமைகளில் தவறிவிட்டார்.

எனவே பிரதான எதிர்க்கட்சி தலைவர் நிலைப்பாட்டை அவரால் தக்க வைக்கமுடியாது போகும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில், தமது கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. அத்துடன் கடந்த காலத்தில் தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற இருமுனைப் போட்டி மாத்திரமே இருந்தது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அனுர சஜித்தை வெற்றி கொண்டு எதிர்க்கட்சி தலைவராவார் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....