1 3
இலங்கைசெய்திகள்

2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..!

Share

2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..!

2024 ஜூலையில் மொத்தமாக 28,003 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) புதிய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 175,163 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு சென்றுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இந்த காலப்பகுதியில் 3,710.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை பணியாளர்கள் அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பு ஆகும், இந்த காலப்பகுதியில் 171,864 பேர் வெளிநாட்டில் வேலைக்காக சென்றுள்ளனர் மற்றும் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 3,363.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டுக்கு சென்றமை பதிவாகியுள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...