30 1
இலங்கைசெய்திகள்

நிதியுதவிகளின் வெளிப்படைத்தன்மையை மீறும் இலங்கை அரசாங்கம்

Share

நிதியுதவிகளின் வெளிப்படைத்தன்மையை மீறும் இலங்கை அரசாங்கம்

வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மானியங்கள் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்படும் பாரிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிதித்தொகை, 100,000 அமெரிக்க டொலர்களை தாண்டும் போது, ​​சட்டப்பூர்வமாக இணையங்களில் தகவல்களை வெளியிட வேண்டும் என்ற அறிவுறுத்தல் மீறப்படுவதாக வெரிடே ரிசர்ச் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்திற்கு இணங்கும் செயற்பாடுகள் மிக மோசமாக உள்ளன என்றும் வெரிடே ரிசர்ச், தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில், அத்தகைய திட்டங்களில் தேவையான 40 சதவீத தகவல்களை மட்டுமே அரசாங்கம் வெளியிட்டதாக வெரிடே ரிசர்ச் குறிப்பிட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு இலங்கையின் முன்னணி பொருளாதார நுண்ணறிவு தளமான PublicFinance.LK இன் 2024 Infrastructure Watch தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது

2022 ஆம் ஆண்டு முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முன்முயற்சியுடன் வெளிப்படுத்தல் தேவைகளை, இலங்கை அரசாங்கம் பின்பற்றுவதை இந்த தளம் கண்காணித்து வருகிறது.

இந்தநிலையில், வெளிநாட்டு நிதியுதவி திட்டங்களுக்கான கொள்முதல் தொடர்பான தகவல்களை வெளியிடுவது இன்னும் குறைவாக இருப்பதாக, குறித்த தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துடன் அரசாங்கத்தின் திட்ட நிதியுதவியை இணைப்பதன் மூலம் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முடியும் என்று பொருளாதார நிபுணரும் வெரிட்டே ஆராய்ச்சியின் பணிப்பாளருமான சுபாஷினி அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை இலங்கைப் பொதுமக்களுக்கு மட்டுமன்றி இந்தத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கடன் வழங்குவோர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் நன்மைகளை வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...