24 1
இலங்கைசெய்திகள்

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – ரணில் உறுதி

Share

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – ரணில் உறுதி

மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

வவுனியா (Vavuniya) விளையாட்டரங்கில் நேற்று காலை (01) இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீ஬லங்கா’ ஜனாதிபதி வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ” மலையக மக்களை பொறுத்தவரையில் பலர் தற்காலிக நாட்சம்பளம் குறித்து பேசி வரும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான ஒரு நிரந்தர தீர்வு என்னும் அடிப்படையில் 1700 ரூபா சம்பளத்தினை பெற்று தந்துள்ளார்.

மேலும், மலையக மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, தற்போது வன்னி மாவட்ட பகுதிகளில் உள்ள நிலப்பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தருவார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...