14 1
இலங்கைசெய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை துன்புறுத்தும் இலங்கை அரசாங்கம்!

Share

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை துன்புறுத்தும் இலங்கை அரசாங்கம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை, இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமது உரிமைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துகின்றபோது, இலங்கையின் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு, மிரட்டல், பொய்யான குற்றச்சாட்டுகள், வன்முறை மற்றும் தன்னிச்சையான கைதுகள் மூலம், காணாமல் போனோரின் குடும்பங்களை தொடர்ந்து துன்புறுத்துகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஒகஸ்ட் 30 அன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊர்வலம் நடத்துவதைத் தடை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அன்றாடம் வேதனையில் வாடுகின்றனர்.

எனினும் இலங்கையின் அரச அமைப்புகள், அவர்களை அமைதியாக்க முயற்சிக்கின்றன, அத்துடன் கொடூரமான முறையில் நடத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.

நூற்றுக்கணக்கான தாய்மார்கள், மனைவிகள் மற்றும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே காலமானார்கள், மேலும் பலர் தாம் வாழும் போதே நீதியை பார்க்க முடியாது என்று ஆதங்கப்படுகின்றனர்.

இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுன கிளர்ச்சியின் போது (1987-89) காணாமல் போனவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (1983-2009) இடையிலான உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை பொறுத்தவரை, உலகின் காணாமல் போனோர் வரலாற்றில் அதிகம் தொகையினராகும்.

எனினும் இலங்கை அதிகாரிகள் பல தசாப்தங்களாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவோ அல்லது அதற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரவோ மறுத்து வருகின்றனர்.

இதுவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், சர்வதேச வழக்குகளுக்கு அழைப்பு விடுக்க வழிவகுத்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...